வீட்டை இழந்தவருக்கு திமுக நிதியுதவி

கொடைக்கானல், பிப். 2: கொடைக்கானல்- பழநி சாலையில் உள்ள வெள்ளப்பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேஸ் வெடித்து சுரேஷ் என்பவரது வீடு முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து சுரேஷ் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தார். கொடைக்கானல் போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு நிவாரணத்திற்கு முன்பே தொகுதி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார் அறிவுரைப்படி கொடைக்கானல் திமுகவினர் மாவட்ட பிரதிநிதி சுரேஷ்பாண்டி தலைமையில் சுரேஷ்க்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி அளித்தனர்.

Related Stories: