கோணம் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிலரங்கம் 11ம் தேதி நடக்கிறது

நாகர்கோவில், பிப்.2:  குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:குமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு வேலை வாய்ப்பு பெற ஏதுவாக திறன் வளர்ப்பு பயிற்சி பயிலரங்கம்  வருகிற 11.2.2019 அன்று காலை 10.30 மணி அளவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இத்திறன் பயிற்சி பயிலரங்கத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகள், திறன் பயிற்சிகளின் பயன்கள், தொழில் முனைவோர்களாக விரும்பும் இளைஞர்களுக்கான அரசுத் திட்டங்கள் குறித்த சிறப்புரைகள் துறை வல்லுனர்களால் வழங்கப்படும்.   இத் திறன் பயிற்சி பயிலரங்கத்தில் குமரி  மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலை வாய்ப்பற்றோர்  உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் கலந்து கொள்ளலாம்.

Related Stories: