ராசிபுரம்,ஜன.29: ராசிபுரம் பாவை கல்வி குழுமத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன், தேசிய கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் தாளாளர், மங்கை நடராஜன், செயலாளர் பழனிவேல், இயக்குநர் ராமசாமி, கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதேபோல், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு தாளாளர் கந்தசாமி, செயலாளர் குணசேகரன், இணை செயலாளர் ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் நிர்மலா தேசிய கொடியேற்றி வைத்தார். எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைபள்ளி மற்றும் எஸ்.ஆர்.வி இன்னவேட்டிவ் பள்ளிகளில் நடந்த விழாவில் பள்ளி தலைவர் ராமசாமி, செயலாளர் செல்வராஜன், துணைத்தலைவர் குமரவேல், பொருளாளர் சுவாமிநாதன், அறங்காவலர் துரைசாமி, இணை செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.