திருப்பூர், ஜன. 22: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அமைப்பின் மாநில தலைவர் சாமிநாதன் நேற்று தெரிவித்தார். அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் சாமிநாதன் நேற்று கூறியதாவது: 2011ம் ஆண்டு அளித்த வாக்குறுதிப்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை அமலாக்க வேண்டும். நீண்ட போராட்டத்துக்கு பின் 1988ம் அமலாக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை 2006 மற்றும் 2016 திருத்தத்தில் இடைநிலை ஆசிரியர் உட்பட சில பிரிவினருக்கு மறுக்கப்பட்டுள்ள அநீதியைக் களைக்க வேண்டும்.