திருப்பூர், ஜன. 22: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 2வது மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு சவுந்தரராஜன் தலைமை வகித்தார். கேசவன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க கொடியை சுப்பிரமணி ஏற்றினார். மாநாட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் துளசிமணி துவக்கி வைத்தார். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட துணை செயலாளர் இசாக், பழனிச்சாமி, மணி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட்டு பூமிக்கு அடியில் கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும்.