காங்கயம், ஜன.22: கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகி திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக 178 கி.மீ., தூரம் நொய்யல் ஆறு செல்கிறது. கோவை நகரத்தில் உள்ள கழிவு நீரையும், திருப்பூரில் வெளியேற்றப்படும் சாய நீருடன் வினாடிக்கு 60 கன அடி நீர் நொய்யலில் இருந்து காவிரி ஆற்றில் நீர் கலந்து வருகிறது. இந்த நீரில் திடக்கழிவுகளின் அளவு அதிகம் உள்ளதால், இதனை விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் நொய்யல் கரையோர மக்கள், தற்போதும் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த நீரையே பயன்படுத்தி வருகின்றனர். காங்கயம் அருகே பல கிராம மக்கள் நொய்யல் ஆற்று கழிவு நீரிரை அன்றாட தேவைகளுக்கும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.