டிஎஸ்பி அலுவலகம் கட்ட தேனியில் பூமிபூஜை

தேனி, ஜன. 22: தேனியில் ரூ.92.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக டிஎஸ்பி அலுவலகம் கட்ட பூமிபூஜை நடந்தது. தேனி மாவட்டம் ேதான்றி 21 ஆண்டுகளாகி விட்டன. இந்நிலையில் தேனி உட்கோட்டத்திற்கான போலீஸ் டிஎஸ்பி அலுவலகம், தேனி என்ஆர்டி நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, டிஎஸ்பி அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட தேனி பங்களாமேட்டில் உள்ள இந்து நாடார் மீட்டிங் ஹால் அருகே மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்தது. இந்த இடத்தில் டிஎஸ்பி அலுவலகம் கட்ட அரசு ரூ.92.6 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, நேற்றுமுன்தினம் குடியிருப்புடன் கூடிய டிஎஸ்பி அலுவலகம் கட்ட பூமி பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் எஸ்பி சுருளிராஜன் தலைமை வகித்தார். டிஎஸ்பி முத்துராஜ், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: