மதுரை, ஜன.22: வீட்டுமனை பட்டா கேட்டு 60 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மதுரை மாவட்டம் கிடாரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பட்டியில் 2 தலைமுறைக்கு மேல் 60 குடும்பத்தினர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. வீட்டமனை பட்டா கேட்டு கடந்த 2015 முதல் பல முறை மனு கொடுத்தும், அதிகாரிகள் விசாரிப்பதாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.