நத்தம், ஜன. 22: நத்தம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியானார். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே பெருமாள்கோயில்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(24). இவர் துவரங்குறிச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது தம்பி கணபதி (21) டூவீலரை ஓட்டிச் செல்ல அவருக்கு பின்னால் செல்வக்குமார் அமர்ந்து சென்றார். இவர்கள் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு துவரங்குறிச்சிக்கு வேலைக்கு கோபால்பட்டி வழியாக டூவீலரில் சென்றனர்.