பவானி, ஜன.22: பவானியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து விவசாயிகளிடம் 210 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.18.25 லட்சம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. பவானி அருகே மைலம்பாடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜன.4ம் தேதி முதல் இங்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் மேற்குக்கரைப் பாசனப் பகுதியில் தற்போது நெல் அறுவடை நடந்து வரும் நிலையில் நெல் வரத்து படிப்படியாக அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இங்கு, சன்ன ரக நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.18.40க்கும், மோட்டோ ரக நெல் ரூ.18க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த இரு வாரங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் சுமார் 210 டன் கொள்முதல் செய்யப்பட்டு, பெருந்துறையில் உள்ள திறந்தவெளி கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு ரூ.18.50 லட்சம் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.