மினி டெம்போவில் பேட்டரி திருடியவர் கைது

சிதம்பரம், ஜன. 22: சிதம்பரம் லால்புரம் விகேஆர் நகரை சேர்ந்தவர் மணி(33). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மினி டெம்போவை சிதம்பரம் வடக்கு

வீதியில் உள்ள ஒரு அச்சகம் முன் நிறுத்தியிருந்தார். அப்போது டெம்போவில் இருந்த பேட்டரியை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மினிடெம்போவில் பேட்டரியை திருடிய சிதம்பரம் தில்லைநகரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் செந்தில்குமார்(36) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.4 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியை பறிமுதல் செய்தனர்.  

Related Stories: