பைக் திருட்டு

விருத்தாசலம், ஜன. 22: விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் செந்தில் (35). இவர் கடந்த 17ம் தேதி இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு, வீட்டுக்கு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து வந்து பார்த்த போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் பைக் கிடைக்கவில்லை.

இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: