திருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா

திருவள்ளூர், ஜன. 18: திருவள்ளூரில் எம்ஜிஆர் 102வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. திருவள்ளூர் அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.நேசன் தலைமையில், மாநில பேரவை இணை செயலாளர் செவ்வை எம்.சம்பத்குமார், மாவட்ட துணை செயலாளர்  கமாண்டோ ஏ.பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், என்.ராதாகிருஷ்ணன், லயன் ரமேஷ், வெங்கடேசன், துக்காராம், செந்தில்குமார், ஏழுமலை, சீனிவாசன், ஜெயச்சந்திரன் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் அதிமுக நகர செயலாளர் ஜி.கந்தசாமி, எஸ்.வேல்முருகன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். இதில், பூபதி, எழிலரசன், குமரேசன், ஜோதி, சக்தி ரங்கன், வெற்றிச்செல்வன், எத்திராஜ் கலந்துகொண்டனர்.புட்லூரில் ஒன்றிய செயலாளர் ஆர்.சந்திரசேகர், காட்டுப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு, ஊராட்சி செயலாளர் கே.ஜி.டி.கவுதமன், மணவாளநகரில் ஒன்றிய செயலாளர் கே.சுதாகர், ஊராட்சி செயலாளர்  ஞானகுமார், பூண்டியில் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, நேமம் ஊராட்சியில் யு.ராக்கேஷ், சிற்றம்பாக்கம் கிராமத்தில் சிற்றம் ஜெ.சீனிவாசன், ராயப்பன் ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.அமமுக சார்பில் நகர செயலாளர் ஆர்.ராஜி மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில், பேச்சாளர் பி.பொன்முடி, அழகினியன், சரவணன், ரிஷ்வான், கோபி, சிலம்பரசன், தாஸ், ரகு, விஜயன், குமார் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.   

Related Stories: