குன்றத்தூர், ஜன.18: . குன்றத்தூர்- திருபெரும்புதூர் சாலையில் நந்தம்பாக்கம் அருகே குன்றத்தூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் மடக்கி விசாரணை செய்தபோது, அந்த வண்டியில் இருந்து வாலிபர் ஒருவர் இறங்கி ஓட முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்த வண்டி மோதியதில் அந்த வாலிபர் காயம் அடைந்தார்.அந்த நபரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். இந்த அந்த ஆட்டோவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.