கரூர்,ஜன.11:கரூர் ரயில் நிலையத்தில் வென்டிங் இயந்திரம் செயல்படாததால் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கின்றனர்.
கரூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கம் வென்டிங் இயந்திரம் இரண்டு வைக்கப்பட்டுள்ளது. தினமும் பிற்பகல் 11மணியில் இருந்து 12மணிக்குள் பாலக்காடு - திருச்சி பாஸ்ட் பாசஞ்சர், ஈரோடுர- திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்கள் வந்து செல்லும். இந்த ரயில் களுக்கு செல்லும் பயணிகள் நுாற்றுக்கணக்கானோர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். இங்குமுன்பதிவு இல்லாத டிக்கெட் கொடுப்பதற்காக ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே செயல்படுகிறது. ஒரே சமயத்தில் அதிக பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் நோக்கில் வென்டிங் இயந்திரம் வைக்கப்பட்டது.