டூவீலர் மோதி முதியவர் படுகாயம்

பெரியகுளம், ஜன.11: பெரியகுளம் அருகேயுள்ள லெட்சுமிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜ்(60). இவர் பெரியகுளத்திலிருந்து தேனி செல்லும் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சருத்துப்பட்டி முத்தலாம்மன் கோயில் தெருவை சேர்ந்த சின்னையன்(65) டூவீலரில் நடராஜன் மீது மோதினார். இதனால் படுகாயமடைந்த நடராஜ், தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: