ஆவடி, ஜன. 11: ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம், சித்தேரிகரை பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (18). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு ஐடிஐ நிறுவனத்தில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் பகுதி நேரமாக பட்டாபிராம், சிடிஎச் சாலையில் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு புருஷோத்தம்மன் விற்பனை நிலையத்தில் ஆட்டோவிற்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு இருந்தார்.அப்போது ஒரு ஆட்டோவில் வந்த நபர்கள், தங்களது வாகனத்திற்கு உடனடியாக நிரப்ப வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு புருஷோத்தமன் வரிசையில் வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவரிடம் ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் தகராறு செய்துள்ளனர். பின்னர் ஆட்டோவில் இருந்த பட்டாக்கத்தியால் புருஷோத்தமனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.