மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் திருப்பரங்குன்றத்தில் 40 பேர் கைது

திருப்பரங்குன்றம், ஜன. 10: மத்திய அரசை கண்டித்து, சிஐடியு சார்பில் திருப்பரங்குன்றத்தில் நேற்று ரயில் மறியல் போராட்டம் தொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு முழுவதும் நேற்று 2 நாளாக வேலை நிறுத்தம், ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பூங்கா நிறுத்தத்தில் இருந்து ஏராளமான சிஐடியு சங்கத்தினர் ஊர்வலமாக ரயில்நிலையம் நோக்கி வந்து, மதுரை செங்கோட்டை ரயிலை மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 40 பேரை கைது செய்தனர்.

இந்த போராட்டத்துக்கு மாநில செயலாளர் ஹெலன் தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சொ.பாண்டியன் திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் ராஜூ, சிஐடியு மாவட்ட செயலாளர் பொன்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: