தூத்துக்குடி,ஜன.10: போலீசாரிடம் இருந்து பெறப்படும் வேலை மற்றும் தனிநபர் நன்னடத்தை சான்றுகள் தொடர்பாக, காவல் துறை அறிமுகம் செய்துள்ள புதிய இணைய வழி சேவையை எஸ்பி முரளிராம்பா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போலீசாரிடம் இருந்து பெரும் நன்னடத்தை சான்றுக்காக பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.inஎன்ற இணையதளத்தில் சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.தனிநபர் விவரம் சரிபார்த்தல், வேலை நிமித்தமாக சரிபார்த்தல், வாடகைதாரரின் விவரம் சரிபார்த்தல், வீட்டு வேலையாள்கள் விவரம் சரிபார்த்தல் போன்ற சேவைகளைப் பயன்படுத்த விண்ணப்பிக்கும் தனிநபர் ரூ.500, தனியார் நிறுவனங்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு, இணையவழி வங்கி சேவை ஆகிய முறைகளில் இக்கட்டணத்தை செலுத்தலாம்.இந்த நன்னடதை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய ஒருவரின் தற்போதைய வீட்டுமுகவரி, காவல்துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா என்ற விவரம் சரிபார்க்கப்படும்.