ஊத்துக்கோட்டை, ஜன.10: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் கடந்த 6 மாதங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையை சுற்றி பாகல்மேடு, புன்னப்பாக்கம், செம்பேடு, காரணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் அனைவரும் வியாபாரம், வேலை சம்மந்தமாகவும், பள்ளி கல்லூரிகளுக்கும் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு வந்து அங்கிருந்து திருவள்ளூர், ஆவடி, செங்குன்றம், பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள்.மீண்டும் மாலை தாமரைப்பாக்கத்திற்கு வந்து கூட்டுசாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்து கிராமங்களுக்கு பஸ் மூலம் செல்வார்கள். இதில், அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படும். இதனால் செயின் பறிப்பு, திருட்டு போன்றவைகளும் நடைபெற்று வந்தது. மேலும் அங்குள்ள கடைகளிலும் திருட்டு நடந்ததுள்ளது. இதை தவிர்க்க தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பின் மையப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் அப்போதைய எம்.பி.(திமுக) ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.