திருப்பரங்குன்றம், ஜன. 9: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று காலை 11 மணியளவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் வலம் வந்தனர். நேற்று கொடியேற்றத்துடன் துவஙகிய விழாவில் தினமும் காலை வேலையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கச்சப்பரத்திலும், மாலை வேலையில் பூத வாகனம், அன்ன வாகனம், புஷ்பசப்பரம், மயில் வாகனம், ரத்தின சிம்மாசனம், பச்சை குதிரை வாகனம் ஆகியவற்றில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.