நாமக்கல், ஜன.8: நாமக்கல் அருகே நள்ளிரவு, டூவீலர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், ஓமலூரை சேர்ந்த மெக்கானிக் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நரிப்பள்ளத்தை சேர்ந்த கார் மெக்கானிக் சுகுமார்(30). இவரது நண்பர் கூலி தொழிலாளி அண்ணாமலை(27). ேநற்று முன்தினம் இரவு, இருவரும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு ஒரே டூவீலரில் ெசன்றனர். நள்ளிரவு 1.30 மணியளவில நாமக்கல் - திருச்சி ரோடு வளையப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே வந்த தனியார் டூரிஸ்ட் பஸ், டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ெசன்ற மோகனூர் போலீசார், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.