திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு பள்ளியில் பெற்றோர் கலந்துரையாடல் கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன.8: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.தலைமையாசிரியர் பாலு தலைமைவகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் அப்துல்முனாப், துணைத் தலைவர் அருளானந்தசாமி, பொருளாளர் பக்கிரிசாமி முன்னிலை  வகித்தனர்.கூட்டத்தில் 10, 11 12-ம் வகுப்பு  மாணவர்களின் கல்வித்தரம், அரசு பொதுத் தேர்வில் நல்லமதிப்பெண் பெறுவது, கல்வியில் பின்தங்கியமாணவர்களின் கல்விதரத்தை உயர்த்துவது தொடர்பாகஆலோசனைவழங்கப்பட்டது. ஆசிரியர் முகுந்தன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் வில்பிரட் நன்றிகூறினார்.

Related Stories: