மதுராந்தகம், ஜன.4: மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மோச்சேரி அமைக்கப்பட்டுள்ள சாலையோர கழிவுநீர் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து அப்பகுதியில் நேற்றுமுன்தினம் திமுக எம்எல்ஏ புகழேந்தி ஆய்வு செய்தார்.
மோச்சேரி பகுதியில் சாலைகளின் இரு புறங்களில் கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள இந்த கால்வாய்கள் முறையான திட்டமிடல் இன்றி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.இதனால், இந்த கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்படும் கழிவுநீர் மேச்சேரி பகுதியில் உள்ள தனியார் 3 பேருக்கு சொந்தமான நிலங்களில் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலைமை உள்ளது.