ஆரணி, டிச. 28: ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வடமதிமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நேற்று முன்தினம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாய நிலத்தில் அமைத்துள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.