மார்த்தாண்டம், டிச. 25: மார்த்தாண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி திருச்சி வாலிபர் பலியானார்.மார்த்தாண்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிளாட்பார கடைகள் பல முளைத்துள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுபோல திருச்சி மாவட்டம் துவரன்குறிச்சியை சேர்ந்த துணி வியாபாரிகள் கடந்த ஒரு வாரமாக சாலையோரம் துணி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஷேக் அப்துல்லா(21) என்பவர் தனது நண்பர்களுடன் ஞாறாம்விளை நேசமணி பாலம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நண்பர்களிடையே போட்டியிட்டு ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு நீச்சலடித்து சென்று திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஷேக் அப்துல்லா அணிந்திருந்த ஆடை காலில் சிக்கி நீந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நீரில் மூழ்கினார்.