காரைக்கால், டிச.21: புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி இன்று (21ம் தேதி) காணொளி மூலம் மக்கள் குறைகளை கேட்கவுள்ளதால், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, கலெக்டர் கேசவன் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் கேசவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி, தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது.