பட்டிவீரன்பட்டி, டிச. 20: வன ஊழியர்களை நியமிக்காததால் பட்டிவீரன்பட்டி அருகே தீத்தடுப்பு கோபுரங்கள் சரக்கடிக்க மட்டுமே பயன்படுகின்றன. பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறை மலைப்பகுதி உள்ளது. போதிய மழையில்லாததால் இவ்வனப்பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ளது. இதனால் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. பெரும்பாறை - சித்தரேவு மலைப்பகுதியில் மாலை, இரவு நேரங்களில் ‘குடிமகன்கள்’ சரக்குகளுடன் வந்து அப்பகுதியை பாராக பயன்படுத்தி வருகின்றனர். அப்போது சிலர் சிகரெட் பிடித்து விட்டு நெருப்பை அணைக்காமல் சென்று விடுகின்றனர். இதனால் காய்ந்த மரம், செடிகளில் பிடிக்கும் தீ மெதுவாக பரவி காட்டுத்தீயாக மாறி வனப்பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதோடு விலை மதிப்பில்லா மரங்கள தீக்கிரையாகி விடுகின்றன.வனப்பகுதிகளில் தீ வைப்பவர்களை கண்காணிப்பதற்காகவும், தீ பரவுவதை தடுப்பதற்காகவும் வனப்பகுதிகளில் பல லட்சம் செலவில் தீத்தடுப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்
ளன.