ஊட்டி, டிச. 19: மின் உற்பத்திக்காக தினமும் பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும் நிலையில், அணையின் கொள்ளளவு குறைந்துக் கொண்டே செல்கிறது.நீலகிரி மாவட்டத்தில் குந்தா மின் வாரியத்திற்குட்பட்ட அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, பைக்காரா போன்ற பகுதகிளில் அணைகள் உள்ளன. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு குந்தா, அவலாஞ்சி, கெத்ைத, பரளி, பில்லூர் டேம், காட்குப்பை, சிங்காரா மற்றும் மாயர் போன்ற நிர் மின் நிலையங்களின் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டும், 800 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் ெதன் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது இந்த அணைகளின் தண்ணீர் அளவு உயரும். சில சமயங்களில் நிரம்பி வழியும். இம்முறை ஜூன் மாதம் துவங்கிய தென்ேமற்கு பருவமழை 4 மாதங்களுக்கு மேல் பெய்தது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் தலைகாட்டியது. இதனால், அனைத்து அணைகளும் நிரம்பியே காணப்படுகிறது. பைக்காரா அணையும் கடந்த ஜூன் மாதம் பெய்த மழையால் நிரம்பி வழிந்தது.