ஆண்டிபட்டி,டிச.18: ஆண்டிபட்டி வாட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்படும் டூவீலர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி தாலுகாவில் 48 கிராம ஊராட்சிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான சிட்டா, பட்டா அடங்கல் உள்ளிட்ட சான்றுகளும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்விச் சம்பந்தமான சான்றுகளும், குடும்ப அட்டை, வருமான சான்று, ஆதார் அட்டை , அரசு உதவித் தொகைகள் உள்ளிட்ட சான்றுகளை பெறுவதற்காக ஆண்டிபட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, பலர் டூவீலர்களில் வரகின்றனர்.