வலங்கைமான், டிச.18: வலங்கைமான் அரசு மருத்துவமனையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பணிகள் துவங்கப்பட்டு ஆறுமாதங்களை கடந்த நிலையில் இதுவரை பணிகள் முடியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிப் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவ் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் நலன்கருதி உயர்கோபுர மின்விளக்கு அமைக்க தீர்மானிக்கப்பட்டது. பின்னர் அதற்கான பணிகள் நடைபெற டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான கான்கிரீட்டால் ஆன அடித்தளம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.