நாமக்கல், டிச.16: பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை கூறி வந்தனர். தற்போது உச்சநீதிமன்றம் ரபேல் ஒப்பந்தம் நேர்மையாக நடந்துள்ளதாக தீர்ப்பு கூறியுள்ளது. ராகுல்காந்தியால் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு அதிகாரிகளிடம் விசாரித்து, அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ந்து, இந்த தீர்ப்பை சொல்லி இருக்கலாம். எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டும்.