நாகர்கோவில், டிச.16: விஜயகுமார் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :குமரி மாவட்ட மாணவர்களின் திறன்களை வளர்க்கும் விதத்தில் மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் முதற்கட்டமாக ஸ்மார்ட் வகுப்பு ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 24 அரசு மேல்நிலை பள்ளிகளில் எனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 அரசு மேல்நிலை பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கல்வித்துறை மூலமும், மாவட்ட நிர்வாகம் மூலமும் நிதி ஒதுக்கீடு செய்து ஸ்மார்ட் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள 75 அரசு உயர்நிலை பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தான் அதிகளவில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டு தன்னிறைவு பெற்றுள்ளது.