நீடாமங்கலம், டிச.12: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த பச்சைகுளம் கிராமத்தில் வாழச்சேரி செல்லும் வழியில் வயல் பகுதியில் வாடகை கட்டிடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.இந்த கடையின் பணியாளர்கள் கடந்த 10ம் தேதி காலை சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் 6 பெட்டியில் இருந்த 304 குவாட்டர் பாட்டில்கள், 11 புல் பாட்டில், ரூ.10ஆயிரம் ரொக்கம் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.