திருவாரூர், டிச.12: அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகள், தொகுப்பு வீடுகள், ஒட்டு வீடுகள் மற்றும் சேதமடைந்த மாடி வீடுகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி நிவாரண தொகையாக ரூ 25 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவாரூர் வட்டாச்சியர் அலுவலக வாயிலில் அக்கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகள், தொகுப்பு வீடுகள், ஒட்டு வீடுகள் மற்றும் சேதமடைந்த மாடி வீடுகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி நிவாரண தொகையாக ரூ 25 ஆயிரம் வழங்க வேண்டும், புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும், மின்சாரம், குடிநீர் இதுவரை கிடைக்காத கிராமங்களுக்கு போர்க்கால அடிப்படையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில் சார்பில் திருவாரூர் தாசில்தார் அலுவலக வாயிலில் அக்கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.