மார்த்தாண்டம், டிச. 12: காட்டாத்துறை அருகே 5ம் வகுப்பு மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்த வாலிபர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.குமரி மாவட்டம் சாமியார்மடம் அடுத்த காட்டாத்துறை அருகே உள்ள ஒரு பள்ளியில், சமீபத்தில் கோதநல்லூர் அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் சென்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர். அப்போது அந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலருக்கு பரிேசாதனை செய்த போது, அங்கிருந்த பெண் மருத்துவரிடம் அடிக்கடி வயிறு வலிப்பதாக மாணவிகள் 2 பேர் கூறினர். அவர்களுக்கு பரிசோதனை செய்து, விசாரித்த போது வாலிபர் ஒருவர் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இது பற்றி அந்த பெண் மருத்துவர் ஆசிரியைகளிடம் விசாரித்தார்.