டெம்போ மோதி தந்தை, மகள் பலி போதை டிரைவர் சிறையிலடைப்பு

திருச்செங்கோடு, டிச.11:  திருச்செங்கோடு அருகே டெம்போ மோதி தந்தை, மகள் பலியான விபத்தில், போதை டிரைவர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு சிறையிலடைத்தனர்.  திருச்செங்கோடு அருகே, நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் டெம்போவை அதிவேகமாக ஓட்டிச்சென்ற டிரைவர் தாஸ், எதிரே வந்த டூ வீலரில் மோதினார். இதில் டூவீலரில் வந்த கோயில் பூசாரி குணசேகரன், அவரது மகள் இலக்கியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர் தாஸ், போதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், டிரைவர் தாஸ் மீது 304 பிரிவின் கீழ், 2 வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நீதிபதி தனம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த அவர், டிரைவர் தாசை 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: