திருப்பூர், டிச.11: திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் முத்தணம்பாளையம், 15 வேலம்பாளையம், நொச்சிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, திருப்பூர் மதுவிலக்கு போலீசார் அப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியை சேர்ந்த சரணவன் (36), சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி (29), ராமூர்த்தி (40) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 67 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.