கலெக்டர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி

நாகர்கோவில், டிச. 11: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை கலெக்டர் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்களும், பொதுமக்களும் எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகன்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: