72 பாட்டில்கள் பறிமுதல் விஏஓ அலுவலகத்தின் பின்புறம் திருட்டுத்தனமாக மது விற்பனை 8 பேர் கைது

சாத்தூர், டிச.7: சாத்தூரில் விஏஓ அலுவலகம் பின்புறம் உள்ளிட்ட இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். 72 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாத்தூர் பழைய பூங்கா அருகில் வைத்து மதுவிற்ற புதுபட்டியை சேர்ந்த கண்ணன்(55) என்பவரை கைது செய்த சாத்தூர் டவுன் போலீசார் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல ஏழாயிரம்பண்ணை ராஜீவ்காந்திநகர் பி.எஸ்.என்.எல் டவர் அருகில் வைத்து மதுவிற்ற சாத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ்(49) என்பவரை கைது செய்த ஏழாயிரம்பண்ணை போலீசார் அவரிடம் இருந்து 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல இருக்கன்குடி விஏஒ அலுவலகம் பின்புறம் வைத்து மதுவிற்ற இருக்கன்குடியை பொன்இருளப்பன்(39), கோசுகுண்டு ரிசர்ச் பாண்டி பெட்டிக்கடை பின்புறம் வைத்து மதுவிற்ற என்.மேட்டுபட்டியை சேர்ந்த சின்னதம்பி(60) இருக்கன்குடி ஆற்றுப்பகுதியில் வைத்து மதுவிற்ற இருக்கன்குடியை சேர்ந்த வேல்பாண்டி(21) ஆகிய மூன்று பேரை கைது செய்த இருக்கன்குடி போலீசார் அவர்களிடம் இருந்து 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல ஒத்தையால் பஸ் ஸ்டாப் அருகில் வைத்து மதுவிற்ற அதே கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி(70), ஒத்தையால் பெட்டிக்கடையில் வைத்து மதுவிற்ற அதே கிராமத்தை சேர்ந்த கிரில்ஜோசப்(55), நடுசூரங்குடி சமுதாயக்கூடம் பின்புறம் வைத்து மதுவிற்ற அதே கிராமத்தை சேர்ந்த மூக்கையா(52) ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்த சாத்தூர் தாலுகா போலீசார் அவர்களிடம் இருந்து 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: