சாலை விபத்தில் வாலிபர் பலி

நெல்லை, டிச. 6:  சாலை விபத்தில் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவர் முனியசாமி (35).

சம்பவத்தன்று நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த இவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏழாயிரம்பண்ைண போலீசார் விசாரித்து வருகின்றனர்,

Related Stories: