திருவண்ணாமலை, டிச.7: திருவண்ணாமலையில் நேற்று நடந்த மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டிக்கான தேர்வில், 24 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு மாநில கையுந்துப்பந்து கழகம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 10ம் தேதி வரை, சென்னையில் மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாடுகிறது. இதற்கான மாணவ, மாணவிகள் தேர்வு நேற்று(வியாழன்) காலை 8 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.