மதுரை, டிச. 5: மதுரையில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கண்காணிக்கப்படும் என போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மதுரை நகரில் குற்றச்சம்பவங்களை தடுகக்வும், நடைபெற்ற குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மதுரை நகரின் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. இதன் மூலம் நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். நகரில் சுமார் 150 முக்கிய சந்திப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த சந்திப்புகளில் தலா நான்கு கேமராக்கள் வீதம் பொருத்தப்படவுள்ளன.