திருத்துறைப்பூண்டி, டிச.5: திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் கேட்டு 2 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புயல் தாக்கியதில் மின் கம்பங்கள் சேதமடைந்து சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நகர பகுதியில் பெரும்பாலான பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் புயல் தாக்கி 18 நாட்களுக்கு மேலாகியும் மின்சாரம் இல்லாததால் உடனே மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் அண்ணா நகர் மெயின் ரோட்டில் திடீர் சாலைலில் ஈடுபட்டனர்.