ஆவடி, டிச.5: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் கார்பென்டர் வீட்டில் புகுந்து 8 சவரன் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், மணிகண்டபுரம், 2வது குறுக்கு தெருவில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் வசிப்பவர் செல்வராஜ் (60). கார்பென்டர். இவரது மனைவி கற்பகம் (53). நேற்று முன்தினம் இரவு செல்வராஜ், சாப்பிட்டு முடித்து மனைவியுடன் தூங்கினார். அதிகாலை 4மணியளவில் கற்பகம் கழிப்பறை செல்வதற்காக எழுந்தார். அப்போது, ஒரு மர்மநபர், மாடி வழியாக தப்பி ஓடுவதை பார்த்து கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு செல்வராஜ் ஓடிவந்தார். அதற்குள் மர்மநபர் தப்பிவிட்டார்.