திருமங்கலம், நவ. 30: மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் குபேந்திரன் (50). கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இரவு பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பினார். கப்பலூர் டோல்கேட் பகுதியில் வந்த போது டூவீலர் கவிழ்ந்து படுகாயமடைந்த குபேந்திரன் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து மதுரை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.