கந்தர்வகோட்டை, நவ.23: கந்தர்வகோட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னைதோப்பில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கஜா புயல் தாக்கத்தால் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தது. மேலும் விவசாய பயிர்களும் பெரும் சேதமடைந்தது. இந்நிலையில் வீரடிப்பட்டியில் சங்கீதா தென்னரசு என்பவரது தென்னந்தோப்பில் 1530 தென்னை மரங்கள் கஜா புயல் தாக்கத்தால் அடியோடு சாய்ந்து பெரும் சேதமடைந்தது. இதனால் அவர் கடும் வேதனையில் இருந்து வருகிறார். இந்நிலையில் வேளாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் கூடுதல் இயக்குநர் முகமதுநசீர் ஆகியோர் சென்னையிலிருந்து நேற்று பாதிக்கப்பட்ட தோப்பிற்கு வந்து ஆய்வு செய்தனர்.