செந்துறை,நவ.23: அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா நகரில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் செயல்பட்டது, அப்போது அண்ணா நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செந்துறை தபால் நிலைய அலுவலர் சசிகலா அலுவலக உதவியாளர் கோகுலிடம் ஜெனரேட்டரை இயக்க கூறினார். பின் மீண்டும் மின்சாரம் வந்துவிடவே அங்கிருந்த ஊழியர் ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரை நிறுத்தியுள்ளார். கோகுல், நிறுத்தும் பட்டனை அழுத்தியும் ஜெனரேட்டர் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஜெனரேட்டரில் கரும்புகையுடன் தீ பிடிக்க துவங்கியது.