குன்றத்தூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்

குன்றத்தூர். நவ 22: குன்றத்தூர் அருகே நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் அருகே பிரதான சாலையில், நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? யாரேனும் கொலை செய்து  வீசிச் சென்றனரா அல்லது தற்கொலையா உள்ளிட்ட பல்வேறு  கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்தவர் வெள்ளை நிறத்தில் வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.

Related Stories: