திருவாரூர். நவ. 21: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரையில் இடைவிடாது பெய்த பலத்த மழையின் காரணமாக கஜா புயல் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. கஜா புயலின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதன் காரணமாக மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு முதல் நேற்று வரையில் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் குடிநீருக்கு கூட திண்டாடும் நிலை இருந்து வருவதால் இதனை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தின்ந்தோறும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கிடாரங்கொண்டான் பகுதியில் குடிநீர் மற்றும் மின் விநியோகம் வழங்க கோரி அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.